search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூய்மை பணியாளர்கள்"

    • தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட சிறப்பு கணக்கெடுப்பு முகாம் நடந்தது.
    • வேல்முருகன், சண்முகப்பிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட் டுத்திட்ட சிறப்பு கணக்கெ டுப்பு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு நகர்மன்றத் தலைவர் எஸ்.மாரியப்பன் கென்னடி தலைமை தாங்கி னார். ஆணையர் ரெங்கநா யகி முன்னிலை வகித்தார்.

    இதில் மானாமதுரை நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். தமிழக அரசு தூய்மைப் பணியா ளர்களுக்கு பல்வேறு திட் டங்களை செயல்படுத்துவ தற்காக அவர்களுக் கான மேம்பாட்டுத் திட்டத்தை கொண்டுவந்துள்ளது.

    இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியான தூய்மைப் பணி யாளர்களை கண்டறிவதற் காக நடைபெறும் கணக்கெ டுப்பு முகாமில், தரைமட்ட கழிப்பறை தொட்டியை தூய்மைப்படுத்தும் பணியா ளர்கள், வாகனங்களில் பணிபுரிவோர், புதை சாக் கடை தூய்மை பணியில் ஈடுபடுவோர், கழிவுநீர் சுத்தி கரிப்பு நிலையம், பொது கழிப்பிடங்களில் பணிபுரி யும் தூய்மைப் பணியாளர் களை சேர்க்க ஆலோசனை வழங்கப்பட்டது.

    இந்தக் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் ஊழியர்க ளுக்கு அடையாள அட்டை களை நகர்மன்றத் தலைவர் மாரியப்பன் கென்னடி வழங்கினார். கணக்கெடுப் பில் ஈடுபடும் ஊழியர்களிடம் உரிய விபரங்களை தூய்மை பணியாளர்கள் வழங்கி அவர்களுக்கு ஒத்து ழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

    முகாமில் நகராட்சிப் பொறியாளர் முத்துக்குமார், துப்புரவு ஆய்வாளர் பாண் டிச்செல்வம், சுகாதார மேற்பார்வையாளர்கள் சிவ ராணி, பிரபு, கார்த்தி, ஹரிணி, தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் காயத்ரி, நகர்மன்ற உறுப்பி னர்கள் வேல்முருகன், சண்முகப்பிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கழிவுநீா் சுத்தகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களின் விவரங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டது.
    • தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளா் நிஷாந்தினி, துப்புரவு அலுவலா் செந்தில்குமாா், ஆய்வாளா் செல்வம், மகளிா் குழுவினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    அவிநாசி:

    திருமுருகன்பூண்டி நகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் மேம்பாட்டுத் திட்டத்துக்கான தூய்மைப் பணியாளா்கள் கணக்கெடுப்புப் பணி தொடங்கப்பட்டது.

    தூய்மைப் பணியாளா்கள் மேம்பாட்டுத் திட்டத்துக்கான தூய்மைப் பணியாளா்கள் கணக்கெடுப்புப் பணியில் கழிவுநீா் மற்றும் மழைநீா் வடிகால், வீடு மற்றும் பொது சமூக கழிப்பறை, கழிவு சேகரிப்பு, கழிவுநீா் சுத்தகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களின் விவரங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டது.

    இதில் தூய்மைப் பணியாளா்களின் குடும்ப விவரங்கள் குறித்து சேகரித்து, அரசு நலத் திட்டங்களுக்கு உள்படுத்தபடவுள்ளது.

    இது குறித்து திருமுருகன்பூண்டி நகராட்சியில் நடைபெற்ற பயிற்சிக் கூட்டத்துக்கு, நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் அலுவலக உதவித் திட்ட அலுவலா் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். நகராட்சி ஆணையா் ஆண்டவன் தலைமை வகித்தாா். தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளா் நிஷாந்தினி, துப்புரவு அலுவலா் செந்தில்குமாா், ஆய்வாளா் செல்வம், மகளிா் குழுவினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். 

    • 1000 பேர் பங்கேற்பு
    • பணிகள் பாதிப்பு

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. 4 மண்டலங்களிலும் 1200 பெண் பணியாளர்களும் 400 ஆண் பணியாளர்களும் ஒப்பந்த துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒப்பந்த பணியா ளர்களுக்கு தினக்கூலியாக ரூ.350 வழங்கப்பட்டு வருகிறது. தினக்கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என ஒப்பந்த பணியாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஒப்பந்த பணியாளர்களுக்கு ரூ.538 வழங்க வேண்டும் என ஆணை பிறப்பித்தார்.

    இருப்பினும் ஒப்பந்த பணியாளர்களுக்கு கூலியை உயர்த்தி வழங்காமல் பழையபடி சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

    கூலியை உயர்த்த கோரி அதிகாரிகள் நேற்று முன்தினம் வரை அவகாசம் கேட்டனனர். ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.

    இதனால் ஒப்பந்த பணியாளர்கள் பகுஜன் சமாஜ் ஒப்பந்த பணியாளர் சங்க பொதுச் செயலாளர் பெருமாள் தலைமையில் இன்று வேலையை புறக்கணித்து மாநகராட்சி அலுவலக நுழைவு வாயிலில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் கடந்த 10 மாதங்களாக ஒப்பந்த பணியாளர் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் இஎஸ்ஐ பிஎப் அவர்களது கணக்கில் வரவு வைக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது.

    இ.எஸ்.ஐ.பி.எப். தங்களது கணக்கில் வரவு வைக்கக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூலியை உயர்த்து வழங்க விட்டால் 10 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

    • தூய்மை பணியாளர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • நெல்லை மாநகராட்சியில் 753 தூய்மை பணியாளர்கள் பணி செய்து வருகிறார்கள்.

    நெல்லை:

    சுய உதவி குழுக்களின் கீழ் பணி புரியும் நெல்லை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 753 பேரை ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைப்பதை கண்டித்தும், தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்த கோரியும் தூய்மை பணியாளர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதன் 2-வது நாளான இன்று மாவட்ட கலெக்டர் கார்த்திகேயனை சந்தித்து தங்களது கோரிக்கை தொடர்பான மனுவை அளிப்பதற்காக நெல்லை மாவட்ட ஊரக உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் நெல்லை மாவட்ட அறிவியல் மையம் முன்பு உள்ள சாலையில் திரண்டனர்.

    தொடர்ந்து அவர்கள் அறிவியல் மையம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வராததை கண்டித்து போராட்டத்தை நடத்தினர்.

    பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாநகராட்சியில் கடந்த 20 ஆண்டுகளாக 47 சுய உதவி குழுக்கள் மூலமாக 753 தூய்மை பணியாளர்கள் பணி செய்து வருகிறார்கள். தற்போது தனியார் ஒப்பந்தக்காரர்களிடம் இந்த தூய்மை பணியாளர்களை ஒப்படைக்க மாநகராட்சி முடிவு செய்தது. இதனை அறிந்து கடந்த மாதம் 27-ந்தேதி அனைத்து தூய்மை பணியாளர்களும் நெல்லை மாநகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தின் காரணமாக மாநகராட்சி அதிகாரி களுக்கும், தொழிற்சங்கத்திற்கும் நடை பெற்ற பேச்சு வார்த்தையில் மாவட்ட கலெக்டர் உத்தரவு அடிப்படையில் தினசரி சம்பளம் ரூ.480 வழங்கி விடுவதாகவும், சுய உதவிக்குழு தூய்மை தொழிலாளர்கள் சுய உதவி குழுவாகவே நீடிப்பார்கள் என்று உறுதி அளித்தார்கள். இதன் அடிப்படையில் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

    இது தொடர்பான தீர்மானமும் கடந்த 4-ந் தேதி நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

    தற்போது ஒரு வார காலமாக சுய உதவிக்குழு தலைவர் மற்றும் செயலாளர்களிடம் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் பணி செய்யும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்றும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குழு தலைவர் மற்றும் செயலாளர் கையெழுத்திட வேண்டும் என்றும் நிர்பந்தப்படுத்தப்படு கிறார்கள் என்று புகார்கள் எழுந்தது.

    அதிகாரிகளின் இந்த செயல் தொழிலாளர் நலத்திட்டத்திற்கும், சமூக நீதிக்கும் புறம்பானது. அதிகாரிகளின் மிரட்டலை கைவிடக் கோரியும், ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து வாங்க கூடாது என்று வலியுறுத்தியும், ஒப்பந்ததாரர்களிடம் சுய உதவி குழு தொழி லாளர்களை ஒப்படைக்க கூடாது என்பதை வலியுறுத்தியும் நேற்று நெல்லை மாநகராட்சியில் பணி செய்யும் அனைத்து பணியாளர்களும் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தகுந்த தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    அப்போது நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் மோகன், பொது செயலாளர் மாரியப்பன், பொருளாளர் செல்லத்துரை ஆகியோர் உடன் இருந்தனர்.

    இதனையொட்டி நெல்லை கலெக்டர் அலுவலக சாலை மற்றும் மாவட்ட அறிவியல் மைய சாலைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இதற்கிடையே தூய்மை பணியாளர்களை சுய உதவி குழுவில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைக்க மாட்டோம் என்று மாநகராட்சி நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கும் வரையிலும் வேலைக்கு செல்வதில்லை என்று முடிவு செய்யப்பட்டது. மாநில பொதுச்செயலாளர் சுகுமாரன் தலைமையில் நாளை (புதன்கிழமை) மேலப்பாளையம் சந்தை பகுதியில் போராட்டம் நடைபெற உள்ளதாகவும், அதில் தூய்மை பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

    நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஒவ்வொரு மண்டல அலுவலகம் முன்பும் மறியல் போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

    • 120 மெட்ரிக் டன் குப்பைகள் சேருகிறது. ஆனால் 60 மெட்ரிக் டன் குப்பையில் தான் அகற்றப்படுகிறது.
    • கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி நேரடி கட்டுப்பாட்டில் வார்டு ஒன்றில் 52 தூய்மை பணியாளர்கள் இருந்தனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் மண்டலத்தில் 14 வார்டுகள் உள்ளன. சுமார் 4 லட்சம் பேர் வசித்து வருகிறார்கள். வீடுகளில் சேறும் குப்பைகளை தினதோறும் தூய்மை பணியாளர்கள் சேகரித்து சென்று வருகிறார்கள்.

    மொத்தம் 700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டு வந்தனர். ஒரு வார்டுக்கு 52 தொழிலாளர்கள் என்ற அளவில் அவர்கள் தூய்மைபணியில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் தூய்மைபணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டதாக தெரிகிறது. தற்போது வார்டுக்கு 20 பணியாளர்கள் என்ற அளவில் உள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் ஒரு தெருவுக்கு குப்பைகள் சேகரிக்க செல்லும் தொழிலாளர்களால் அப்பகுதியில் முழுமையாக பணியை செய்ய முடியாத நிலை நீடித்து வருகிறது. இதனால் மதியம் வரை குப்பை சேகரிக்கும் பணி நடந்தும் முழுவதும் முடிக்க முடியவில்லை. இதனால் வேலைக்கு செல்பவர்களின் வீடுகளில் குப்பைகள் தேங்கி விடுகிறது.இதற்கு முன்பு காலை 10 மணிக்குள் வீடுகளில் குப்பைகள் சேகரிப்பு முடிந்து வந்தது. இதற்கிடையே குப்பைகள் சேகரிக்க தூய்மை பணியாளர்கள் வரமுடியாததால் பெரும்பாலானோர் குப்பைகளை பிளாஸ்டிக் பைகளில் கட்டி தெருக்கள், மற்றும் வீட்டு முன்பு வீசிவிடுகின்றனர். அதையும் அகற்ற நாள்கணக்கில் ஆவதால் திருவொற்றியூர் பகுதி முழுவதுமே குப்பை நகரமாக மாறி வருகிறது. நிரம்பி வழியும் குப்பைகளால் திருவொற்றியூர் பகுதியில் உள்ள முக்கிய சந்திப்புகளான விம்கோ நகர் சக்திபுரம், எல்லையம்மன் கோவில், காலடிபேட்டை, மாடர்ன்லைன், மேற்கு மாடவீதி, வடிவுடையம்மன் கோவில் பின்புறம், ஜோதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது.

    மேலும் பல இடங்களில் போதுமான குப்பை தொட்டிகள் வைக்கப்படாததால் அவை நிரம்பி வழிந்து வருகின்றன. இதனால் கடும் துர்நாற்றம் வீசிவருகிறது. மேலும் குப்பை அதிகம் சேரும் ஞாயிற்றுக் கிழமைகளில் பலருக்கு விடுமுறை அளிக்கப்படுவதால் மறுநாள் குப்பை சேகரிப்பு பணி கடும் சவாலாக மாறி வருகிறது. மேலும் வாகனங்களில் வந்தும் குப்பைகளை முறையாக அகற்றுவதில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி கவுன்சிலர் ஒருவரிடம் கேட்டபோது கூறியதாவது:-

    திருவொற்றியூர் மண்டலத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி நேரடி கட்டுப்பாட்டில் வார்டு ஒன்றில் 52 தூய்மை பணியாளர்கள் இருந்தனர். அப்போது குப்பைகள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டு வார்டு தூய்மையாக இருந்தது.

    ஆனால் தற்போது தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டதால் 24 பேர் மட்டுமே ஒரு வார்டில் வேலை செய்கின்றனர். வார்டில் வேலை செய்யும் ஒரு தூய்மை பணியாளர் 7, 8 தெருக்களை சுத்தம் செய்ய வேண்டி உள்ளது. இதனால் அவர் பகல் 12 மணி வரையும் தூய்மை பணியில் ஈடுபடுகிறார். மேலும் பல வார்டுகளில் குப்பையை தரம் பிரிக்க இடம் இல்லை. எனவே அந்தந்த இடங்களில் பிளாஸ்டிக் பைகளில் குப்பைகளை கட்டி போட்டு விட்டு பின்னர் மொத்தமாக குப்பை கிடங்கிற்கு எடுத்து செல்கின்றனர். நீண்ட நேரம் குப்பை தெருக்களில் தேங்கி கிடப்பதால் அவற்றை கால்நடைகள், நாய்கள் சாலைகளில் இழுத்து போட்டு விடுகிறது. குப்பைகள் அதிகம் சேர்ந்தால் அதை மூட்டை கட்டி அருகில் உள்ள பள்ளம் மற்றும் முட் புதர்களில் போட்டு விட்டு சென்று விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது.

    திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் 120 மெட்ரிக் டன் குப்பைகள் சேருகிறது. ஆனால் 60 மெட்ரிக் டன் குப்பையில் தான் அகற்றப்படுகிறது. எனவே இது குறித்து மேலும் 350 தூய்மை பணியாளர்கள் வேண்டுமென்று மாநகராட்சிக்கு கடிதம் எழுதி உள்ளோம். உடனடியாக கூடுதல் ஆட்களை ஒதுக்கி திருவொற்றியூர் நகரை சுத்தமாக வைத்துக் கொள்ள மாநகராட்சி உதவ வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது குறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது குப்பைகளை அகற்றும் பணியை தனியாரிடம் ஒப்படைத்து விட்டதால் நாங்கள் அதில் தலையிடுவதில்லை. புகார் வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்றார்.

    • அவிநாசி கருப்புசாமி, அந்தியூா் குணசேகரன், அவல்பூந்துறை செல்வம், சண்முகம் ஆகியோா் பயிற்சி வழங்கினா்.
    • பயிற்சி வகுப்பை அவிநாசி பேருராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி தொடங்கி வைத்தாா்

    அவிநாசி:

    அவிநாசியில் பேரூராட்சி செயல் அலுவலா்களுக்கு தூய்மைப் பணியாளா்கள் மேம்பாட்டுத் திட்டப் பயிற்சி நடைபெற்றது.பயிற்சி வகுப்பை அவிநாசி பேருராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி தொடங்கி வைத்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் இந்துமதி தலைமை வகித்தாா்.இதில் அவிநாசி கருப்புசாமி, அந்தியூா் குணசேகரன், அவல்பூந்துறை செல்வம், சண்முகம் ஆகியோா் பயிற்சி வழங்கினா். தூய்மைப்பணியாளா்களின் விவரங்களை சேகரிப்பது, முக்கிய தூய்மைப் பணியாளா்களை கண்டறிவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.அவிநாசி, குன்னத்தூா் மற்றும் சாமளாபுரம் பேரூராட்சி செயல் அலுவலா்கள், மேற்பாா்வையாளா்கள், பேரூராட்சிகளின் பரப்புரையாளா்கள், மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் ஆகியோா் பயிற்சி பெற்றனா்.

    • தமிழ்நாடு தூய்மைபணியாளர் நலவாரிய உறுப்பினர் மோகன், துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    • திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ், பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர்உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை , சாலை வசதி, குடிநீர் வசதி என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 714 மனுக்களை பெற்றுக்கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து தாட்கோ சார்பில் தூய்மை பணியாளர் நல வாரியத்தின் கீழ் 1 நபருக்கு தூய்மை பணியின் போது ஒரு கை பாதிப்படைந்த நிலையில் நலவாரியத்தின்கீழ் நிவாரண நிதி உதவியாக ரூ.1 லட்சத்திற்கான காசோலை மற்றும் 8 தூய்மைபணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பிற்கான ஆணைகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் , மாவட்டஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செல்வி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் புஷ்பாதேவி, மாவட்ட மேளாலர் (தாட்கோ) ரஞ்சித்குமார், தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் சங்க உபதலைவர் கனிமொழி பத்மநாபன், தமிழ்நாடு தூய்மைபணியாளர் நலவாரிய உறுப்பினர் மோகன், துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஒப்பந்ததாரர் போலீசில் புகார்
    • கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    போளூர்:

    போளூர் அடுத்த அலங்கார மங்கலம் ஊராட்சியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் உள்ள குப்பைகளை சேர்த்து பொதுவாக ஒரு இடத்தில் கொட்டுவதற்காக 15 -வது நிதி குழுவின் திட்டத்தின் மூலம் 1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான ஏரிக்கு அருகில் திடக்கழிவு மேலாண்மை அமைக்க ப்பட்டது.

    அலங்காரம் மங்கலம் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் திடக்கழிவு அமைக்கப்பட்ட இடத்தில் கொட்டுவது வழக்கம்.

    அதே பகுதியை சேர்ந்த ஒருவர் குப்பைகளை இங்கே கொட்ட கூடாது, என்று தூய்மை பணியா ளர்களை தரைக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

    2 நாட்களுக்கு முன்பு இரவோடு இரவாக வந்து கடப்பாரை, மண்வெட்டி யால் திடக்கழிவு மேலாண்மைக்காக அமைக்கப்பட்டிருந்த தொட்டியை அகற்றி உள்ளனர்.

    இன்று காலையில் சேகரிக்கப்பட்ட குப்பை களை கொட்டு வதற்காக தூய்மை பணியாளர்கள் அந்தப் பகுதிக்கு சென்றனர்.

    அப்போது திடக்கழிவு தொட்டிகளை இடித்து தள்ளப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனையடுத்து ஒப்பந்த தாரர் முனுசாமி என்பவர் போளூர் போலீசில் புகார் அளித்தார். மேலும் பொதுமக்கள் திடக் கழிவு மேலாண்மையை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    • ஈரோடு மாநகராட்சி 4 மண்டலத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    • ஊதியம் வழங்குவதில் ஏற்பட்டு உள்ள குளறுபடிகளை களைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி 4 மண்டலத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 100 பேர் நிரந்த பணியாளர்களாகவும் மீதம் உள்ள 200-க்கும் மேற்பட்டோர் தற்காலிக பணியாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.

    இவர்கள் 4-ம் மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மை பணிகளில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களில் நிரந்த பணியாளக்குக்கு மாத மாதம் 1-ந் தேதி முதல் 10-ந் தேதிக்குள் ஊதியம் வழங்கபட்டு வருகிறது.

    ஆனால் தற்காலிக தினக்கூலி பணியாளர் களுக்கு ஊதியம் வழங்கு வதில் வேண்டுமென்ற அதிகாரிகள் தாமதம் செய்து வருவதாகவும்,

    இதன் காரணமாக தற்காலிக பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறி ஈரோடு மூலப்பாலையத்தில் உள்ள மாநகராட்சி 4-ம் மண்டல அலுவலகம் முன்பு இன்று தற்காலிக பணியாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பணிகளை புறக்கணித்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களா கவே ஊதிய வழங்குவதில் தாமதம் ஏற்படுத்தி வருவதா கவும், இதன் காரணமாக தற்காலிக பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் உடனடியாக தாமதம் செய்யாமல் ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் மேலும் ஊதியம் வழங்குவதில் ஏற்பட்டு உள்ள குளறுபடிகளை களைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

    மேலும் வரும் செவ்வாய்க்கிழமை அன்று ஈரோடு மாநகராட்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    • தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெ‌ற்றது.
    • நகர மன்ற தலைவர் என்.இ.கே. மூர்த்தி கலந்து கொண்டு சிறப்பாக பணி புரிந்தவர்களை பாராட்டி பரிசு வழங்கினார்.

    பூந்தமல்லி:

    கோவில் நகரமான திருவேற்காடு நகராட்சி பகுதிகளில் குப்பை இல்லாத, சுத்தமான நகரமாக மாற்றுவதற்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    அதன் தொடர்ச்சியாக 18 வார்டுகளிலும் கடந்த இரண்டு வாரங்களாக ஸ்வச்சதா லீக் எனப்படும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றது.

    தூய்மையின் அவசியம், பிளாஸ்டிக் ஒழிப்பு போன்றவற்றை வலியுறுத்தி பேரணி, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்குதல், தெரு முனை கூட்டங்கள், வாகனம் மூலம் பிரச்சாரம், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தல், வீடு வீடாக பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம், கண் சிகிச்சை முகாம், குப்பைகளை தரம் பிரித்து அளிப்பது, இயற்கை உரம் தயாரிப்பு, பள்ளி - கல்லூரி மாணவர்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கலை நிகழ்ச்சிகள் நடத்துதல் போன்ற பல்வேறு வடிவங்களில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து காந்தி ஜெயந்தி அன்று திருவேற்காடு நகராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், பரப்புரையாளர்கள் ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

    இதில் நகர மன்ற தலைவர் என்.இ.கே. மூர்த்தி கலந்து கொண்டு சிறப்பாக பணி புரிந்தவர்களை பாராட்டி பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் நகர் மன்ற துணை தலைவர் ஆனந்தி ரமேஷ், நகராட்சி ஆணையர் ஜகாங்கீர் பாஷா, துப்புரவு அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ், துப்புரவு ஆய்வாளர் பிரகாஷ், கவுன்சிலர்கள் பிரதானம், காஞ்சனா இளையராஜா, ஜானகி சுடலைமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் தூய்மை இந்தியா திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திய சிறந்த கல்லூரி, பள்ளிகள், மருத்துவமனை, பூங்கா, தனியார் நிறுவனங்களுக்கு கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    • மருத்துவ முகாம் வரதாச்சாரியார் நகர பூங்காவில் நடைபெற்றது.
    • தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு நகர மன்ற தலைவர் செல்வராஜ் ஆலோசனை யின் படி ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் சிறப்பு மருத்துவ முகாம் வரதாச்சாரியார் நகர பூங்காவில் நடைபெற்றது.

    இந்த மருத்துவ முகாமிற்கு நகர் நல அலுவலர் லெட்சுமணன் தலைமை தாங்கினார். சுகாதார அலுவலர் சுரேஷ், துப்புரவு ஆய்வாளர்கள் ஆல்பர்ட் டேவிட் பால், பழனிச்சாமி ஆகியோர் முன்னில வைக்கத்தனர். 250 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு தங்களது உடல்களில் உள்ள நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை பெற்றனர். மருத்துவர் ரவிக்குமார் தூய்மை பணியாளர்களுக்கு சிகிச்சை அளித்தது குறிப்பிடத்தக்கது.

    • பஜார் பூக்கடை சந்திப்பு பகுதி குப்பைகள் கொட்டப்பட்டு குப்பைமேடாக காட்சியளித்தது.
    • விழிப்புணர்வு ஏற்படுத்திய தூய்மை பணியாளர்களை வாகன ஓட்டிகள் வெகுவாக பாராட்டி செல்கின்றனர்.

    தென்காசி:

    தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியான பஜார் பூக்கடை சந்திப்பு பகுதியில் அப்பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் வீடுகளில் இருந்து அகற்றப்படும் குப்பைகள் சாலையோரங்களில் கொட்டப்பட்டு குப்பைமேடாக காட்சியளித்து வந்தது. அதை அகற்றிவிட்டு தூய்மையே சேவை, இங்கு குப்பை கொட்டாதீர் என்ற வாசகத்துடன் தூய்மைப்படுத்தி கோலம் போட்டு நகராட்சி தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர். இதனை அவ்வழியே செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் வித்தியாசமாக உள்ளது எனவும் தூய்மை பணியாளர்களை வெகுவாக பாராட்டியும் செல்கின்றனர். எனினும் அருகில் இருக்கும் வியாபாரிகள், வீடுகளை சேர்ந்தவர்கள் அங்கு குப்பைகளை கொட்டாமல் இருக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

    ×